தகுதியுள்ள பயணாளி அனைவருக்கும் அட்டை! அதிகாரிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்!

கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பயண்படும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கான பதிவு செய்யும் முகாம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செததுது.
இந்நிலையில் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி தலைமையிலும், சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைபதிவுக்கான முகாமின துவக்கி வைத்து புதிதாக பதிவு செய்யப்பட்ட அட்டையை பயணாளிக்கு வழங்கினார். முகாமில் கலந்துள்ள தகுதியுள்ள பயணாளி அனைவருக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் அட்டைபுதிவு செய்து வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் அசோகன், சிவானந்தம்,கோபால்,மோகனா சண்முகம்,கனேஷன் மற்றும் வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் சானு ஆகியோர் உடனிருந்தனர். இந்த முகாமில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணடைந்தனர்.