சி.எம்.சி.மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார் கலைஞரின் பேரன்! நன்றி சொன்ன மு.க.அழகிரி! இடையூறு ஏற்படுத்திய செக்யூரிட்டி சுந்தரம்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி 6 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.
கலைஞரின் பேரனும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரைதயாநிதி கடந்த மார்ச் 14 ஆம் தேதி வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள சி.எம்,சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வேலூர் சி.எம்.சிக்கு மாற்றப்பட்டார்.
சி.எம்.சி மருத்துவமனையின் "ஏ வார்டில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக தொடர் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்தார். இந்த இடைபட்ட காலத்தில் இருமுறை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றார். கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினரும் துரைதயாநிதியை நலம் விசாரித்து சென்றனர்.
இந்த நிலையில் சிகிச்சையில் நல்ல முன்னேற்றமடைந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ் ஆகி சென்னை சென்றார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் துரை தயாநிதியை அவரது தந்தை முக அழகிரி தாய் ஆகியோர் உடன் அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை ஊழியர்களிடம் மனதார நன்றி சொல்லிவிட்டு அவர்கள் புறப்பட்டனர்.
நேற்று திங்கள் கிழமையன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தகவல்கள் பரவியதால் உள்ளூர் செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றனர். அப்போது நாளைக்கு (இன்று) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆகவே இன்று செய்தியாளர்கள் அங்கு சென்றனர்.
பின்னர் துரை தயாநிதி டிச்சார்ஜ் ஆகி வெளியே வருவதை போர்டிகோவில் நின்றுக்கொண்டு வீடியோ போட்டோ எடுத்தனர் செய்தியாளர்கள்.
அப்போது அங்கு இருந்த செக்யூரிட்டி சுந்தரம் என்பவர் செய்தியாளர்களை "போயா வாயா என்றும் என்ன பண்ணுவ? என்னை என்ன பண்ணுவீங்க? பிரச்சனை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னா கேக்க மாட்டேங்கிறீங்க".... என்று சத்தம் போட்டு செய்தியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார்.
அதே போல் அங்கு இருந்த சிலரும் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக சந்தோஷ் என்கின்ற அட்டெண்டர் தாக்குதலில் ஈடுபட்டான்.
அப்படி தாக்குதல் நடத்திய நபர் பின்னர் போலிஸ் வாகனத்தில் ஏறி புறப்பட்டதைப் பார்த்த செய்தியாளர்கள், யார் அவர், அவர் ஏன் போலிஸ் ஜீப்பில் ஏறிசெல்கிறார் என்று குரலெழுப்பி அவரை வெளியேற்றினர்.
இதனால் மருத்துவமனை போர்டிகோ அருகில் சலசலப்பு ஏற்பட்டது.
இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணம் செக்யூரிட்டி சுந்தரம் தான். அவர் தொடங்கி வைத்த கூச்சலே இப்படி பிரச்சனைக்கு காரணமானது. மு.க.அழகிரியின் பார்வை அவர் மீது பட வேண்டும் என்பதற்காக ஓவராக சவுண்டு விட்டுக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது செய்கை அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே இடையூறாக அமைந்தது.
இந்த சுந்தரம் தமிழக காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். ஆனாலும் கூட இன்னமும் போலிஸ் என்று அவர் மனசுல நினைப்பு போலும்.
சிகிச்சைக்கு வந்து செல்வோரை குறித்து செய்தி சேகரிக்க ஆஸ்பத்திரியின் வார்டு வரைக்கும் போகக்கூடாது என்பதை செய்தியாளார்கள் அறிவார்கள்.
துரை தயாநிதி விவிஐபி குடும்பத்தைச் சேர்ந்தவர், அதுமட்டுமின்றி அவர் நலமுடன் வீடு திரும்புகிறார் என்கிற செய்தியை வெளியிட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக போர்டிகோவில் குழுமி செய்தி எடுத்தவர்களை வசைபாடிய சுந்தரத்தின் மீது சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்தால் நலம்.