திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்!

திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்!

  கு.அசோக்,

மதுரையில் வரும் 15 ஆம் தேதி நடக்கும் கோரிக்கை மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்பது எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழுவில் தீர்மானம் - தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் பேட்டி

 வேலூர்மாவட்டம், வேலூர் ஆசிரியர் இல்லத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  

  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அன்னையா தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் ஜெயப்ரகாஷ் பங்கேற்றார். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர்  ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநில செயல்பாடுகள் குறித்து  பேசினார்.

  இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு முடிவின்படி பத்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 .12 .24 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் கோரிக்கை மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவது.

 அந்த மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 150 ஆசிரியர்கள் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.  தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பறிக்கும் அரசாணை எண் 243 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

 கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு கூட வாட்ஸ் ஆப் குழுவில் விண்ணப்பித்து மாநகராட்சி ஆணையரின் முன் அனுமதி பெற்ற பிறகு விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ விடுப்பு ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நேரடியாக கோவை மாநகர ஆணையரின்அனுமதி பெற வேண்டும் என்ற அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையினை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம்.

   அந்த தீர்மானத்தினை ஏற்று இன்று கோவை மாநகர ஆணையர் இந்த உத்தரவினை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்கள்.

   இதனை வேலூர் மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

    வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

 பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

  ஈட்டிய விடுப்பு சரண் செய்யப்படும் நடைமுறை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும்.

  ஆசிரியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  தமிழ்நாட்டில் ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், தொடக்கக்கல்வித் துறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள் அடைந்துள்ள கற்றல் திறனை ஆய்வு செய்திடும் வகையில் ஆசிரியர்களில் கற்பித்தல் திறனை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு மதிப்பிடுவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு இந்த நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.