தூத்துக்குடி சி.எஸ்.ஐ.பிஷப் மீது சினம் கொண்ட சினாட்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
சி.எஸ்.ஐ.பிஷப் மீது சினாட் சினம் கொண்டிருப்பதாகவும், டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் தோற்றவர்களை அங்கிகரிக்க முயன்றதால் இந்த நடவடிக்கையாம்.
தூத்துக்குடி சி.எஸ்.ஐ. நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில் இருந்த அணி தோல்வியை தழுவியது.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அவர்கள் பேராயர் தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.
இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற அணியினர் தென்னிந்திய திருச்சபை தலைமையகம் சினாடிடம் முறையிட்டனர்.
சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க பேராயருக்கு அதிகாரம் இல்லை எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது.
மேலும் பேராயரை முய்றையாக வென்றவர்களை அறிவித்து அந்த அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.
ஆனால் சினாடு அறிக்கையை புறம் தள்ளிய பேராயர் தேவசகாயம் நேற்று இரவு திருமண்டல தேர்தலில் தேல்வியுற்ற முன்னாள் லே செயலாளர் ராஜனின் வெள்ளரிக்காய் ஏற்றுமதி நிறுவனத்தில் வைத்து நடந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
வரும் நவம்பர் 1ம் தேதி திருமண்டல தேர்தல் நடைபெறும் என்று சினாடு அறிக்கைக்கு எதிராக அறிவித்தார்.
இதுகுறித்து திருசபை நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது ராஜன் அணியினர் தேவசகாயத்திற்கு கவனிப்பு ஏதும் செய்திருப்பார், பேராயரின் ஓய்வுக்கு பின் நல்லா இருக்கலாம் என்று ஆசை வார்த்தை பேசியதாகவும், அதை நம்பி சினாடுக்கு எதிராக பேராயர் அறிக்கை விட்டுள்ளார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல் பேராயர் ஜெபசந்திரன் என்பவர் சினாடை பகைத்ததால் தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்காமல் பாதியில் நடையை கட்டிக்கொண்டார்.
அதே போன்று இரண்டாவது பேராயரான தேவசகாயமும் சினாடுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் விரைவில் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
புதிய பேராயர் வரும் வரை மாடரேட்டர் கமிசரி அமைத்து வழக்கமான பணிகளை செயல்படுத்தபடும் என தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.
ஊழியம் செய்வதற்கு எப்படியெல்லாம் போட்டி போடுறாங்க பாருங்களேன்.