இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்! கலெக்டர் எச்சரிக்கை!

இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்! கலெக்டர் எச்சரிக்கை!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்- வனவிலனங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க சூரிய ஒளி மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கபடுகிறது. இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் சுற்றி விளக்குகளை எரிய விடுங்கள் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 வேலூர்மாவட்டம், வேலூரில் மாவட்ட தந்தை பெரியார் மைய நூலகத்தில் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை மக்கள் பார்வைக்காக மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி திறந்து வைத்தார். 

 மாவட்ட நூலகர் பழனி, கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம், உள்ளது உண்மை தான்.

 நேற்று கூட பேர்ணாம்பட்டு சாத்கர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். விளக்குகளை இரவு நேரத்தில் எரிய விட்டால் வனவிலங்குகளின் நடமாட்டம் குறையும்.

  மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். மேலும் வன விலங்குகளிடமிருந்து வனத்தை ஒட்டியுள்ள பகுதி மக்களை பாதுகாக்க சூரிய ஒளி மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று சொன்னார்.