எஸ்.சி, எஸ்.டி.யினருக்கு எச்.சி.எல் நிறுவனத்தில்  வேலை வாய்ப்புடன் கூடிய  பட்டப்படிப்பு! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

எஸ்.சி, எஸ்.டி.யினருக்கு எச்.சி.எல் நிறுவனத்தில்  வேலை வாய்ப்புடன் கூடிய  பட்டப்படிப்பு! திருப்பத்தூர் ஆட்சியர் தகவல்!

 ஆர்.ரமேஷ்,

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மூலமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, எச்.சி.எல்  நிறுவனத்தில்  வேலை வாய்ப்புடன் கூடிய  பட்டப்படிப்பு (B.Sc,

Computing Desgining) B.Com, BCA & BBA ) சேர்ந்து படித்திட  வழி வகை செய்யப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

    தாட்கோ மூலம் 2022 / 2023 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில், பி.எஸ்,சி கம்ப்யூட்டர் டிசைனிங், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளில் படிக்கலாம்.

மேலும், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் -இல் வேலை வாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி, கம்ப்யூட்டர் டிசைனிங், தஞ்சாவவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.சி,ஏ, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ, பி.காம்., (Integrated Management) பட்டப் படிப்பு நாக்பூரில் உள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

  இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராகவும் 2022 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணும், 2023 ஆம் ஆண்டு தேர்வில் 75 சதவீத மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், ஹெச்.சி.எல். நிறுவனம் மூலமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும்.

  இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.