சுதந்திரம் பெற்ற பின்னர் அல்லேரி மலைக்கு சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் இந்த நந்தகுமார் தான்!

சுதந்திரம் பெற்ற பின்னர் அல்லேரி மலைக்கு சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் இந்த நந்தகுமார் தான்!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில்  ரூ. 2.  90 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது   -  பாம்பு கடித்து குழந்தை இறந்து போன அல்லேரி மலைகிராமத்திற்கு  சாலை அமைக்க  நடவடிக்கை எடுக்கபடும் அனைத்து மலை கிராமங்களிலும் வனத்துறை அனுமதி பெற்று சாலையை அமைப்போம், சுதந்திரம் பெற்ற பின்னர் அல்லேரி மலைக்கு சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் இந்த நந்தகுமார் தான் என்று அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,  வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவானது மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம்,சலவை பெட்டி,விவசாய இடு பொருட்கள் வேளாண் கருவிகள் வீட்டு மனைபட்டாக்கள் உள்ளிட்ட ரூ.2. 90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 இவ்விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில் அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து மலையில் இருந்து கொண்டு வருவதற்கு குழந்தை உயிரிழந்துவிட்டது.  7-ஆண்டுகளாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்.

 அதிமுக ஆளுங்கட்சி இருந்த போது பீஞ்சமந்தை ஜார்தான் கொல்லை பாலாம்பட்டு கிராமத்தில் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தும் அவர்கள் செய்யவில்லை.

 ஆனால் திமுக அரசு ரூ.5.50 கோடி பணம் ஒதுக்கி 6.5.கிலோமீட்டர் சாலை அமைக்கபடவுள்ளது.

 சுதந்திரம் பெற்ற பின்னர் அல்லேரி மலைக்கு சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் இந்த நந்தகுமார் தான்.

  நான் அங்கு சென்று அங்கு நியாயவிலைகடையை திறந்துவிட்டு வரும் போது அந்த பாதை சரியில்லை. அது பற்றி ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அவரும் ஒரு மாதத்தில் அனுமதி கொடுத்தார்.

  ஆனால் அதற்குள்ளாக இப்போது ஒரு குழந்தை பாம்பு கடித்து இறந்துவிட்டது.  அது நடந்திருக்க கூடாது விரைந்து அல்லேரி மலையில் சாலைகள் போடப்படும்.

   மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் பீஞ்சமந்தைக்கு சாலை போடுகிறோம். மீதமுள்ள மலை கிராமங்களில் விர்ய்ந்து சாலை அமைப்போம் எந்த உயிரும் இனி போகாது எந்த தொகுதியில் மலைகள் இருந்தாலும் அக்கிராமங்களுக்கு சாலை அமைத்து தருவோம் என்று பேசினார்.