ஹெல்மெட் போட்டவர்களுக்கு பரிசளித்த கிறிஸ்த்துமஸ் தாத்தா!

ஹெல்மெட் போட்டவர்களுக்கு பரிசளித்த கிறிஸ்த்துமஸ் தாத்தா!

கு.அசோக்,

 கிறிஸ்துமஸை முன்னிட்டு வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகள் மகிழ்விக்கப்பட்டனர்.

 வேலூர்மாவட்டம், வேலூர் நகரில் ஆதரவு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

 சாந்தி பாஸ்கரன் என்பவர் தலைமையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் நிலையில்,   புதுமையான முறையில் கிறிஸ்துமசிற்காக விழிப்புணர்வை கொண்டாடினர்.

 அதன்படி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டுமென விழிப்புணர்வை ஏற்படுத்தியும், சாலை விதிகளை மதிக்க வேண்டுமென வலியுறுத்தும் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் தேவதை வேடமணிந்து வந்தனர்.

 அப்போது ஹெல்மட் அணிந்தவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். இதில் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன் கலந்துகொண்டார்.

 மேலும் மாணவர்கள் சாலைகளில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு போர்வைகள் கொசுவலை, ஷுவட்டர் தொப்பிகள் போன்ற பல பொருட்களை வழங்கினார்கள் இதில் மாணவர்கள் அவர்களாக முன் வந்து செய்த செயல் பாராட்டத்தக்கது.