மண் கடத்திய ஒருவர் கைது!

மண் கடத்திய ஒருவர் கைது!

 ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மண் கடத்திய ஒருவர் கைது!ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை.

 திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி பகுதியில் அனுமதியின்றி மண் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன் அடிப்படையில் அங்கு சென்ற தனிபடைப்பு போலீசார் மண் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் உத்திரன் (35) என்பவரை கைது செய்து மண் கடத்தலுக்கு  பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 இது தொடர்பாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்மை காலங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிக அளவில் மழை மற்றும் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி பல்வேறு பகுதிகளில் மண் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் மாமுல்தானே.