உயிர்களைப் பறித்த பேட்டரி பைக்!

கு.அசோக்,
வேலூரில் விடியற்காலை எலெக்டிரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியது இதில் போட்டோகிராப்பர் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலி
வேலூர் மாவட்டம், வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவில் வசிப்பவர் போட்டோகிராப்பர் துரைவர்மா. இவரது மகள் மோகன பிரீத்தி (13) போளூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார்.
அதனை இன்று விடியற்காலை வீட்டினுள் நிறுத்தி ரீசார்ஜ் செய்ய முயன்ற போது அந்த பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.
இதனால் அருகிலிருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் தீப்பற்றியது. சத்தம் கேட்டு கண்விழித்த துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் பாத்ரூகுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டனர். அப்போது தீ பரவி ஏற்பட்ட புகைமூட்டத்தால் அவர்கள் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டு உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்படி ஸ்கூட்டர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வாங்கினார்கள். அதே போல் இறந்த போட்டோகிராபரின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில், மகன் அவரது பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டதால் அவன் உயிர்பிழைத்தான்.
இந்த விபத்துக் குறித்து ஸ்கூட்டர் கம்பெனி தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக போலிஸ் வட்டாரத்தில் சொன்னார்கள்.