டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில்- கள்ளச் சாராயத்தை அழித்த போலிசார்!

ஜி.கே.சேகரன்.
மலை கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு மாதக்கணக்காக ரகசிய தகவல் அளிக்கப்பட்டது.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வேலூர் வேலூர் சரக டிஐஜி¢. ஜ.ஆனி விஜயா இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று பேர்ணாம்பட்டு காவல் துறை ஆய்வாளர் ராஜன் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் தேவபிரசாத் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மேற்படி ஏரியாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மறைவான இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சியதை கண்டுபிடித்தனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4000 லிட்டர் கள்ளச்சாராயத்தை உடனடியாக அழித்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வண்ணம் போலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் அவா.