210 ஆர்டர்லிகள் திரும்ப காவல் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்! நீதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை!

210 ஆர்டர்லிகள் திரும்ப காவல் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்! நீதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை!

ம.பா.கெஜராஜ்,

  கடந்த 2014ம் ஆண்டில்  மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 7 ஆண்டுகளுக்கு  பிறகு இந்த ஆண்டு தான் அவர் வீட்டை காலி செய்துள்ளார்.  இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.

 இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன்,  ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர்  கடிதம் எழுதினார். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளார். தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யார், யார் அனுமதியை மீறி குடியிருக்கிறார்கள் என்பதை கண்டறிய டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

 அப்படியிருக்க நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம்.

  ஆர்டர்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உடனடியாக ஆர்டர்லிகளை திரும்பப்பெற வேண்டும். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது.  அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்.

 குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பளிக்கும் காரில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, காவல்துறை  உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது. 

   ஓய்வுபெற்ற காவல்துறையினர், ஓய்வு பெற்ற நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப்பெற வேண்டும்.    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தி அளிக்கிறது. அடுத்தகட்ட விசாரணை ஜூலை 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.  

 இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

  தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் 'ஆர்டர்லி'யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது.  மேலும், 150 போலீசார் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர்,  `ஆர்டர்லி' என்ற  முறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

   இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டலியின் பணியானது, உயர்அதிகாரிகளின்  போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தான், ஆனால் அதிகாரிகளின் வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். பொதுவாக, காவல்துறையில் எடுபிடி வேலை என்பதுதான் ஆர்டர்லி வேலை என்று பேசப்படுகிறது.

   தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், இன்னும் ஆர்டர்லி முறை தொடர்ந்த நிலையில் நீதியரசர் எஸ். எம். சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் டிஜிபி நடவடிக்கை எடுத்து 210 காவர்களுக்கு அந்தஸ்த்தை ஏற்படுத்தியுள்ளார்.