பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்!பூஜை போட்ட அமைச்சர் எ.வ.வேலு!

பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்!பூஜை போட்ட அமைச்சர் எ.வ.வேலு!

கு.அசோக்,

   வாணியம்பாடி ஆவாரங்குப்பம் பாலாற்றின் குறுக்கே  ரூ.18 . 40  கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு  18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என பேச்சு,

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாராயணபுரம் ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே சுமார் 18 கோடி 40 லட்சம் மதிப்பிலான பாலம் கட்டும் பூமிபூஜை நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அமர் குஸ்வாஹா தலைமை தாங்கினார்.

   ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வா.வேலு கலந்துகொண்டு பூமி பூஜையை துவங்கி வைத்து பேசுகையில்,  இம்மேம்பாலம் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.18. 40 கோடி மதிப்பீட்டில்  கட்ட பணிகள் துவக்கமாக பூமி பூஜை போடப்பட்டுள்ளது இந்த பணிகள் மக்கள் பயனடையும் வகையில் விரைந்து முடிக்கப்படும் 18 மாதங்களில் மேம்பாலம் முழுவதுமாக கட்டி முடிக்கப்படும் என்றார்.