கர்நாடக தமிழர்களுக்கு தேசியகட்சிகள் எம்.எல்.ஏ. சீட்டு வழங்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை!
வி.வெங்கட கிருஷ்ணா,
கர்நாடக மாநில சட்டபேரவைக்கான தேர்தல் பேச்சுகள் இப்பொழுதே எழத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் கர்நாடக வாழ் தமிழ் குடும்பங்களின் ஒருங்கிணைப்பாளரான திரு.வி.செந்தில்குமார் கோரிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தமிழக சட்டபேரவையில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 25 சதவிகித அம்மக்களின் நலனில் அவர்கள் சத்தமில்லாமல் அக்கறை எடுத்து வருகிறார்கள்.
அதே போல் தமிழர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் அரசியல் உரிமைகள் வேண்டும்.
கர்நாடகாவிலும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடுக்க வேண்டும்.
கோலார் தங்க வயலில் இருந்து ஒரு தமிழரை எம் .எல் .ஏ. வாக தேர்ந்தெடுப்பது வாடிக்கை. அது பத்தாது. இன்னும் நிறைய தமிழ் எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகவில் உருவாக வேண்டும். அதற்கு தேசிய கட்சிகள் வாய்பளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.