கொலைக்கு உடந்தையாக இருந்தவருக்கு மாவுகட்டு!

டி.முகமது இர்ஃபான்,
பரபரப்பான வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலைவழக்கில் பிடிபட்ட பகர் சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றூ பிடிபட்ட ஒருவருக்கு மாவுகட்டு போடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஜீவா நகரில் கடந்த 10-9- 2021ஆம் தேதி நடந்த மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் மாநில பொதுச் செயலாளர் முகமது வாசிம் அக்ரம் என்பவரை டீல் இம்தியாஸ் என்பவர் கூலிப்படையை வைத்து கொலை செய்தார்.
ஆடு வெட்டுவதை போல் நடந்த இந்த கொலை பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சரண்டர் ஆன கொலையாளிகளை கஸ்டடி எடுத்து விசாரித்த போலிசார் மேலும் பலரை கைது செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த சம்பவத்தில் முக்கிய எதிரியான பீபா என்ற தாஜுதீன் என்பவர் போலிசாரிடம் பிடிபட்டார்.
அவரை கைது செய்ய முயலும்போது தப்பி ஓடி தடுக்கி விழுந்து வலது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டதாம்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளித்த பின்பு வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி,மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.