மாட்டுக்கு சூன்யம் வச்சுட்டாங்க அய்யா!போலிசில் புகார்!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
மாடு பால் கறக்க மறுக்கிறாது, சூன்யம் வச்சுட்டாங்க அய்யா என்று சொல்லி போலிசில் ஒருவர் புகார் அளித்திருக்கிறார் மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயாகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர், பாபுலால் ஜாதவ் வயது 45 விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு எருமை மாடு உள்ளது.
இந்த மாடு கடந்த சில நாட்களாக பால் கறக்க விடுவதில்லை.இதனால் வேதனை அடைந்த அவர், இவர் தான் வளர்க்கும் எருமை மாட்டுடன் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்றார்.
தன் எருமை மாடு நாலஞ்சு நாளா பால் கறக்க விட மாட்டேங்குது. யாரோ சூனியம் வச்சுட்டாங்க, அதான் மாடு பால் கறக்க விட மாட்டேங்குது ஊரே சொல்லுது.
இந்தப் பிரச்சினையை நீங்கதான் தீர்த்து வைக்கணும்” என்று புகார் செய்தார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி போலீஸ் துணை சூப்பிரண்டு அரவிந்த் ஷா, கால்நடை மருத்துவர் ஒருவரை கொண்டு அந்த கிராமவாசிக்கு உதவுமாறு போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலதிகாரி உத்தரவுக்கு இணங்க அவரும் உடனே நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மாடு பால் கறக்க அனுமதிக்கிறதாம்.
ஆகவே பெட்டிஷனை அவர் வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.