கேராளவுக்கு கடத்தப்படும் தமிழக கனிமவளங்கள்!

ரவிககாலேப்,
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினம் 700 டாரஸ் லாரிகளில் கனிம வளம் கட்டத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பல காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளையும் கடந்து சென்றது.
அவை தேசிய நெடுஞ்சாலையை சேதப்படுத்தி சென்று கொண்டிருந்ததை ஜிபிஎஸ் வெப்கேமரா மூலம் புகைப்படம் எடுத்து செய்தியாக பிரசுரமானது.
இவை தமிழக உயர் காவல் அலுவலர்களின் பார்வைக்கு எட்டியதும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர் .
அந்த உத்தரவை மதித்த மாதிரியுமிருக்கனும், லாரிகளை அனுப்பிவைத்து விசுவாசத்தையும் காட்டனும் என்று முடிவெடுத்த குமரி மாவட்ட போலீசார்
அதிக பாரம் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரிகள் வெறும் 2000 ரூபாய் அபராதம் விதித்து சீட்டிங் செய்துள்ளார்கள்.
இதுகுறித்து காவல் துறையின் நேர்மையான அலுவலர் ஒருவலர் தெரிவிக்கையில் அதிக பாரம் ஏற்றிச்செலும் கனிமவள லாரிகளுக்கு குறைந்தது தலா 30 ஆயிரம் ரூபாய் முதல் நாற்பதாயிரத்திற்கு மேல் அபராதம் விதிக்க வேண்டும்.
ஆனால் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிய உடன் உயர் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை தொடர்பு கொண்டு சிறிய அபராதத்துடன் விடுவிக்க கூறியுள்ளனர்.
லஞ்சம் வாங்கும் அலுவலர்களின் துணையோடு தான் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் சாலைகளை சேதப்படுத்தி வருகிறது.
அதே போல் அலுவலர்களுக்கு லஞ்சம் கிடைப்பதால் குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வதே இல்லை.
உயர் அலுவலர்கள் ஊடகங்களில் செய்தி வெளியானவுடன் கேள்வி எழுப்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில் கண்துடைப்புக்காக சிறு அபராதம் விதித்து உயர் அதிகாரிகளிடம் கணக்கு காண்பித்து தனி கல்லா கட்டி வருகிறார்கள்.
ஒரு இரவில் சுமார் 700 க்கும் அதிகமான டாரஸ் லாரிகளின் மூலம் கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுகிறது.
இவை அனைத்தும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலைய பகுதிகளையும், குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் உள்ள நிலையில் மூன்று காவல் உட்கோட்ட பகுதிகளையும் கடந்து களியக்காவிளை உட்பட எல்லையோர சோதனைச் சாவடிகள் வழியே கேரளாவுக்கு பறந்து செல்கிறது என்றார் அவர்.