சிறுமியை கெடுத்த விவகாரம்:- ஜெயிலிலிருந்த வந்தவர் கொலை!

ச.பாண்டி,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் பஸ் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.
அப்படியிருக்க இந்த வழக்கில் இருந்து டிரைவர் முருகன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வீட்டில் இருந்த முருகன் இன்று காலை 7 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாந்தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுமியின் உறவினர்கள் டிரைவர் முருகனை கத்தியால் வெட்டினர்.
வலியால் துடித்த முருகனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தனர். இதனால் சிறுமியின் உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.