என்னை முறைத்து பார்த்ததால் உதைத்தேன்! வாலிபரை தாக்கிய எஸ்.ஐ. தெனாவட்டு!

சபரி.ஈஸ்வரன்,

  என்னை முறைத்துப் பார்த்ததால் அடித்தேன் என்று தெனாவட்டாக பேசும் உதவி ஆய்வாளரின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் கடந்த 27 ஆம் தேதி திங்கட்கிழமை இரவில் வேம்பார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

   அப்போது அங்கு சூரங்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரம் வந்துள்ளார். அவர் இரவில் தாமஸ் ஆல்வா எடிசன் தனியாக இருப்பதை கண்டு அந்த இளைஞரிடம், எதற்காக இங்கு நிற்கிறாய்? என விசாரித்தார்.

அதற்கு அந்த இளைஞர் காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரத்தை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த காவல் சார்பு ஆய்வாளர் சுந்தரம் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 உடனே அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சூரங்குடி சார்பு ஆய்வாளர் சுந்தரத்திடம், ஏன் அந்த தம்பியை அடிச்சீங்க?, பஸ் ஏற நிற்கக்கூடாதா?, நின்னா அடிப்பீங்களா? என கேட்டனர்.

  இந்த காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து தட்டிவிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  தற்போது சார்பு ஆய்வாளர் சுந்தரம் அடித்ததாக கூறப்படும் இளைஞர் தாமஸ் ஆல்வா எடிசன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், சார்பு ஆய்வாளர் சுந்தரம், அடுத்த ஆளை தாக்க மும்முரமாக சுற்றிவருகிறார்.

 அது சரி,