கையேந்தி பவன் நடத்தும் திமுக பெண் கவுன்சிலர்!

டி.முகமது இர்பான்,
திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் கையேந்தி பவன் நடத்தி வருகிறார்.
அவரது பெயர் புஷ்பாவதி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியின் திமுக கவுன்சிலராக உள்ளார். இவர் கவுன்சிலராவதற்கு முன்பிலிருந்தே சாலையோரம் தள்ளுவண்டியில் கையேந்தி பவன் நடத்தி வருகிறார்.
அது போல, சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமூக பணிகள் பலவற்றை ஆற்றி வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த கவுன்சிலர் தேர்தலில் மேற்படி பகுதியில் கவுனிசிலராக போட்டியிட்டு வென்றுள்ளார்.
தற்போது கவுன்சிலராக வென்ற பிறகும், இவர் தள்ளுவண்டிக் கடை தொழிலைத் தொடர்கிறார். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் புஷ்பாவதி வீட்டுக்கு தேவையான பணிகளை முடித்துக் கொண்டு, அடுத்ததாக தங்கள் உணவு விடுதி பணிகளை கவனித்து வருகிறார்.
அவருக்கு அவரது கணவர் பெரும் உதவியாக உள்ளாராம்.
பின்னர் பிற்பகலில் வார்டு தெருக்களுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிவதுடன், அவற்றை உடனடியாக சரி செய்தும் வைக்கிறாராம்.
குறிப்பு:- இவர் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார்.