ஏசி ரூமில் ஆணையர்! கழிவு நீரில் துப்புரவாளர்கள்

ஏசி ரூமில் ஆணையர்! கழிவு நீரில் துப்புரவாளர்கள்

 ஜி.கே.சேகரன்,

   நகராட்சி ஆணையர் ஏசி ரூமில் காற்று வாங்கும் சில்லென்று அமர்ந்திருக்க, துப்புரவு பணியாளர்க¬ளோ பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கைகளால் கழிவுநீரை அள்ளி கட்டமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் ஆணையராக திருநாவுக்கரசு என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பொதுமக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் புகார் மனு அளிக்க சென்றால் அதனை வாங்காமல் நக்கலாக பேசுவதும், ஆவேசமாக பேசிவதும் வாடிக்கையாக கொண்டு உள்ளார் என கூறுகின்றனர்.

  இதனையடுத்து திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 14ஆவது வார்டு மற்றும் 30வார்டுக்கு நடுவே ரயில்வே தரைபாலம் அமைந்துள்ளது. இந்த தரைபாலத்தின் வழியாக திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை, நாட்றம்பள்ளி மற்றும் சென்னை டூ பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்ல பிரதான வழியாக உள்ளது.

   இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் நிலையில்தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த தரைப்பாலத்தில் மழைநீருடன் பாதாள சாக்கடை நீரும் கலந்து குளம் போல் கழிவுநீர் தேங்கி வருகிறது.

 இதனை மின்மோட்டார் மூலம் அப்புறபடுத்தாமல் நகராட்சியில் பணிப்புணியும் துப்புரவு பணியாளர்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீரை கைகளால் அள்ள வைத்துள்ளார் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு.

 இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் என கழிவுநீரில் சிக்கி தவித்து சென்றனர்.  எனவே மின்மோட்டார் மூலம் கழிவுநீரை குறித்த நேரத்தில் அப்புறப்படுத்தாமல் ,துப்புரவு பணியாளர்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அள்ள வைத்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இது குறித்து கழிவுநீரை இரண்டு மணி நேரமாக துப்புரவு பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கைகளால் அள்ள வைத்த நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மீது மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.