டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் சரிந்தன!

கு.அசோக்,
மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே சரிந்ததால், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக மகி மண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண்ணை கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே இயக்கி வந்ததால் சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கி இழுத்துவரப்பட்டது.
இதனால் சுமார் 22 மின்சார கம்பங்கள் உடைந்து கீழே சாய்ந்தன. மின்கம்பங்கள் கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் அந்த கிராமங்கள் இரவில் மூழ்கியது.
மண் ஏற்றி வந்த நான்கு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனா. ¢இந்த சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளித்தும் ஆடி அச்ய்ந்து வந்திருக்கிறார்கள்.
இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் சிக்கியது.