நகராட்சி மெத்தனத்தால் பேருந்து நிலையம் பாழ்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்திற்கு சென்ற குடிநீர் லாரி பள்ளத்தில் சிக்கியதால் 6000 லிட்டர் குடிநீர் வீண் ஆனது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்திற்கு தினமும் நகராட்சி மினி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இரு தினங்களாக பெய்த மழையால்இன்று குடிநீர் கொண்டு சென்ற லாரியானது பள்ளத்தில் சிக்கியது.
இதனால் லாரியில் இருந்த 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வீணாக வெளியேற்றப்பட்டது.
வெளியேற்றப்பட்ட குடிநீரானது அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கழிவுநீர் கால்வாய்க்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே குட்டை போல் தேங்கியது இதனால் பயணிகள் செல்வதற்கு அவதிப்பட்டனர். இதை அடுத்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு குடிநீர் லாரியை வெளியே இழுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த லட்சணத்தில் நகராட்சி உள்ளது?