விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்த பெண் அதிகாரிகள்! ஆட்சியர் அறிவுறையை அலட்சியம் செய்தனர்!

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சமையல் வீடியோ பார்த்த பெண் அதிகாரிகள்! ஆட்சியர் அறிவுறையை அலட்சியம் செய்தனர்!

  ஜி.கே.சேகரன்,

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் விவசாயிகள் குறைகளை எடுத்து கூறிய போது அதற்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் செல்போன்களில் சமையல் செய்வது எப்படி என மற்றும் திரைப்படங்களை பார்த்துகொண்டு அலட்சியமாக இருந்தனர்.

  அப்போது ஆட்சியரின் கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை வனத்துறையினர் கைவிட வேண்டும் விவசாயிகள் வாக்குவாதம் நடந்தது

 வேலூர் மாவட்டம், வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளை எடுத்து கூறிக்கொண்டிருந்தனர்.

  இதற்கு பதிலளிக்க வேண்டிய பலதுறை சார்ந்த அதிகாரிகள் பெண் அதிகாரிகள் பல்வேறு வகையான சமையல்களை எப்படி செய்வது எனவும் சிலர் திரைப்படங்களை செல்போனில் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

  ஆட்சியரோ விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் என பல முறை சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

  இந்த நிலையில் விவசாயிகள் உரங்கள் விதைகள் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும், பல இடங்களில் குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம் கிடைப்பதால் மின் மோட்டார்கள் பழுதாகிறது அதனை சரி செய்ய வேண்டும் எனவும் பேர்ணாம்பட்டு பகுதியில் விவசாயிகள் மீது வனத்துறை வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகின்றனர் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற மாவட்ட ஆட்சியர் உத்தரவிடார்.

 என்ன கொடுமை அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

  இதுகுறித்து கூறிய போது விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது.

 பல உள்ளாட்சிகளில் அரசின் அனுமதி பெறாமல் பனைமரங்களை வெட்டி விடுகின்றனர் எனவே இதனை வெட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய போது அதனை வெட்ட கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.