நாக பாம்பை அலேக்காக பிடித்த பெருசு!

க.பாலகுரு,
6 அடி உயர நாக பாம்பை லாவகமாக பிடித்து அதனை வனப்பகுதியில் விட்டார் முதியவர் ஒருவர்.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள மணக்கரை பகுதியில் இளையராஜா, மனோஜ் ஆகிய சகோதரர்களின் வீடு உள்ளது. இவரது வீட்டில் 6 அடி உயரமுடைய ராஜநாக பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது அந்த வீட்டில் விளையாடு கொண்டிருந்த அவர்களது குழந்தை இதனை பார்த்து பயந்து ஓடிபோய் தனது பெற்றோரிடம் கூறியது.
உடனே அங்கு வந்த மனோஜ் மற்றும் இளையராஜா வீட்டில் பாம்பை தேடியுள்ளனர். அப்போது அங்கு இருந்த பொந்து ஒன்றில் பாம்பு பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பாம்புபிடிக்கும் வீரரான ராமசாமி என்ற முதியவரிடம் வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவிக்க அங்கு வந்த ராமசாமி பாம்பை பொந்தில் இருந்து வரவழைத்து லாவகமாக பிடித்தார்.
அப்போது நாகபாம்பு தன்னை யாரும் கொன்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில் படம் எடுத்தபடி சீறியது. ஆனால் பாம்புபிடி வீரர் எதற்கும் சலைக்காமல் பாம்புவின் வாலைபிடித்து அதன் முன் அமர்ந்துகொண்டு விளையாட்டு காட்டினார். இதனை அக்கம்பக்கத்தினர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் பாம்புபிடி வீரர் ராமசாமி நாகபாம்பினை பத்திரமாக கொண்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.