குடியாத்தத்தில் ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் வரும் கனரக  வாகனங்கள் நிறுத்தும்!எஸ்.பி.நடவடிக்கையால் குடியாத்தம் மக்கள் சந்தோஷம்!!

குடியாத்தத்தில் ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் வரும் கனரக  வாகனங்கள் நிறுத்தும்!எஸ்.பி.நடவடிக்கையால் குடியாத்தம் மக்கள் சந்தோஷம்!!

ஜி.கே.சேகரன்,

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர பகுதியில் பள்ளி நேரங்களில் மாணவர்கள் காலையில் செல்லும்போது கனரக வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப. அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

 இந்நிலையில் மாவட்ட தகவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.

   காலை 8 மணி முதல் 11 மணி வரைமாலை 4 மணி முதல் மணி வரை வாகனங்கள் செல்லக்கூடாது என்று கனரக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவல் துறையினருக்கு உதவி செய்யும் படி அறிவுரை கூறினார்.

   இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் குடியாத்தம் நகரப் பகுதியில் போக்குவரத்து குறைந்த பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்களை ஒவ்வொன்றாக போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனால் குடியாத்தம் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயலால் குடியாத்தம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.