இளைஞர்கள் தவறான பாதைகளுக்கு சென்று விடக்கூடாது:-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 108 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இம்முகாமிற்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு உருவாக்கவும், இளைஞர்கள் தவறான பாதைகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக வேலைவாய்ப்பு முகங்கள் நடைபெற்று. கடந்த வாரம் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் பொதிகை பொறியியல் கல்லூரியில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் துவக்கி வைத்து, பணி ஆணைகளை வழங்கி, சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய், என்ற வள்ளுவனின் வாக்கு கேட்ப, அனைவருக்கும் வேலை வாய்ப்பு வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம், உதாரணமாக படித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. கல்வி வேறு, வேலைவாய்ப்பு வேறு, அதற்கான தகுதிகளை திறமைகளையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் படித்தவர்கள் குறைவாக இருந்தார்கள், அதனால் படித்தவர்களை நாடி வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது, தற்போது அந்த நிலை இல்லை உலகில் இருக்கின்ற அண்டை நாடுகளில் தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றன. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வகையில் கல்வியை நீங்கள் முறையாக பெற்று உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்கின்ற பொழுது வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கல்லூரி காலம் என்பது மிக மிக முக்கியமான காலகட்டம். உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற காலகட்டமாகும். இதனை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்களை நீங்களாகவே வழி நடத்த முடியும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த முகாமில் பல்வேறு தனியார் துறைகளை கலந்து கொள்ள வைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
நீங்கள் சாதாரண வேலை என்று நினைத்து வேலைக்கு செல்லாமல் இருக்கிறீர்கள் நிச்சயமாக அது கிடையாது, தற்போது இருக்கக்கூடிய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் சிறிய அளவில் தொடங்கப்பட்டு அது படிப்படியாக முன்னேறி உள்ளது. அனைவரும் கிடைக்கின்ற வேலையை ஏற்றுக்கொண்டு அந்த வேலையில் இருந்து அனுபவத்தை பெற்று, அதைவிட பெரிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.
இதனால் அனைவரும் சரியான வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள், கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள், தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அனைவரும் போட்டி தேர்வுகளுக்கும் தங்களை தயார் செய்து கொண்டு அரசு பணியில் சேர வேண்டும்.
புத்தகம் இல்லாத அறை உயிரற்ற உடலுக்கு சமம் என்ற சொல்வதைப் போல, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடைய உயிர் தோழனாக புத்தகம் தான் இருக்க முடியும், தினந்தோறும் புத்தகம் வாசிப்பதை ஒரு பழக்கமாகி கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சொல்வதற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் புத்தகம்.
ஆகவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பு அடைய வேண்டும், தமிழ்நாடு அரசினுடைய அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு, நீங்கள் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் அந்த திட்டங்களை பயனடைய செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இம்முகாமில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருமதி.ரேணுகாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.ரேவதி, கல்லூரி முதல்வர் டாக்டர்.சீனுவாசகுமரன், உதவி திட்ட அலுவலர் திரு.கே.முருகேஷ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி.திருமதி, ஒன்றிய குழு துணை தலைவர் திரு.மோகனகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.