சில்மிஷ மருத்துவர் சிறையில்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூரில் சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவாரின் செயலால் ஆத்திரத்தில் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதுடன், சில்மிஷ மருத்துவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் 24-மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு வயிற்று வலி என போஸ்கோ நகரை சேர்ந்த பல்மருத்துவர் அர்ச்சனா என்பவர் சிகிச்சைகாக சென்றுள்ளார்.அப்போது மருத்துவர் தியாகராஜன் என்பவர் அர்ச்சனாயிடம் பாலியல் தொல்லை ஈடுப்பட்டு உள்ளார்.இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர். சேர் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதம் ஏற்பத்தினர்.இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் மருத்துவர் தியாகராஜனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதே போல் ஆஸ்பத்திரியை சேதப்படுதியவர்கள் குறித்து விசாரித்தனர். முடிவில் மருத்துவர் தியாகராஜனையும், போஸ்கோ நகரை சேர்ந்த ஐந்து பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. மருத்துவர் தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மருத்துவர் அர்ச்சனா தெரிவிக்கையில் என்னுடைய பேண்ட்டை கழற்றச்சொல்லி மருத்துவர் தியாகராஜன் வற்புறுத்தினார். ஏற்கனவே இந்த மாதிரி அந்த டாக்டர் செயல்பட்டார் என்றும் சொன்னார்.