12 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர நபர் கைது!

12 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர நபர் கைது!

 கு.அசோக்,

 ஜோலார்பேட்டையில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஸ்டேட் பேங்க் அருகாமையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கையில் பேகை வைத்துக் கொண்டு சுற்றி திரிந்து வந்துள்ளார்.அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் திருப்பத்தூர் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் தலைமை காவலர் மூர்த்தி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.மேலும் அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்ததில் 12 கிலோ அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது.

   உடனடியாக அவரை பிடித்து திருப்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.பின்ன விசாரிக்கையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கடதுல்லா கிராமம் ஜெகநாதன் மகன் கிரி சாணி மகேஸ்வராவ் வயது 28 என்பது தெரியவந்தது.மேலும் சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.