அய்யா அது வெடிகுண்டா? பட்டாசா? இப்போதாவது சொல்லுங்களேன்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடியில் வீட்டின் மீது நாட்டுவெடி வீசிய வழக்கில் சென்னை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் - இனியவள் தம்பதியினர் இவர்களுக்கு 3 பிள்ளைகள் ஆர்த்தி குகன் மற்றும் பிரீத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த 05.09.23 அன்று நள்ளிரவு இனியவள் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த போலிசார் வஃழக்கம் போலவே ஆடி அசைந்து வந்தனர். அதற்கு முன்னதாகவே மீடியா பர்சன்ஸ் அங்கு ஆஜர் ஆகிவிட்டார்கள்.
பின்னர், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் நாட்டு வெடி வீசியது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இடையே இது பட்டாசு என்று போலிஸ்தரப்பில் ஒரு பிட்நோட்டிஸ்மாதிரி கொடுக்கப்பட்டதாம், அதை வாங்கி பார்த்த மீடியா குரூப் விபத்து நடந்த இடத்தின் சூழ்நிலையை பட்டாசு கடையில் கேட்டறிந்து இது பட்டாசு இல்லை வெடிகுண்டு தான் என்று உறுதிபடுத்திக் கொண்டு அப்படியே செய்தியும் வெளியிட்டனர்.
இந்நிலையில் மேற்கண்ட தனிப்படையினர், விசாரித்த போது, சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த இனியவளின் மருமகன் ஜெகதீசன் என்பவர் 1கோடி ரூபாய் மேல் கடன் பெற்று கொண்டு திருப்பி தர மறுத்து சென்னையில் இருந்து வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருந்துள்ளார், இந்நிலையில் ஜெகதீசனுக்கு கடன் கொடுத்த சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி,தாம்பரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் ஜெகதீசனை சென்னையில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், ஜெகதீசன் வாணியம்பாடியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தனர்.
ஆகவே மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்து வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் இனியவள் வீட்டு மீது நாட்டு வெடி வீசிவிட்டு தப்பிசென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலாஜி மற்றும் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை வாணியம்பாடி கிராமிய நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு தலைமறைவாக உள்ள ரங்கராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அய்யா அது வெடிகுண்டா பட்டாசா இப்போதாவது சொல்லுங்களேன் என்று அப்பகுதிவாசிகள் வாணியம்பாடி கிராமிய போலிசாரை பார்த்து கேட்கிறார்கள் பாவம்.