ச்சே இவுங்களளை கூடவா ஏமாத்துவீங்க!

ச்சே இவுங்களளை கூடவா ஏமாத்துவீங்க!

 கு.அசோக்,

வாலாஜா  நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாத ஊதியத்தை சரியான முறையில் வழங்காததை கண்டித்து ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  நகராட்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆரம்பத்தில் 40 ரூபாய் சம்பளத்தில் துவங்கி சுமார் 15 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்    ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபாய் வீதம் மாதம் 1,0500 சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த சம்பள தொகையை தருவதில்லை. மிக சொற்ப தொகையே வழங்குகின்றனர்.

 ஆனால் கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் சம்பள தொகை முழுமையான சம்பளத்திற்கு 5000 ரூபாய் சம்பளமே வழங்கப்படுகிறது என தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டினா.¢ மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  தங்களுக்கு முழுமையான சம்பளம் வழங்காததை கண்டித்து நேற்று காலை மஞ்சகாமாலை தெருவில் உள்ள கிரீன் வொர்ல்ட் ஐஸ் பவர் சோலியூஷன்ஸ்  ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது பேசிய தூய்மை பணியாளர்கள் மாதம்தோறும் சரியான தேதியில் சம்பளம் சம்பளம் வழங்குவதில்லை, கொரோனா காலகட்டத்தில் கூட எங்களுடைய உயிரை பணையவைத்து கடுமையான முறையில் பணிபுரிந்தோம் ஆனால் இது நாள் வரைக்கும் எந்த ஒரு ஒப்பந்த நிறுவனம் எங்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் போன்றவைகள் எங்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.

 அதேபோன்று முறையாக சம்பளத்தை வழங்காமல் எங்களை மிரட்டி வேலை வாங்கியதோடு எங்களுடைய பணிபுரிந்த சம்பளத்தை கேட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என்று அராஜக பதிலை கூறி மிரட்டுகின்றனர்

மேலும் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் சரியான முறையில் சம்பளத்தை வழங்குகின்றனர் அதேபோல கடுமையாக வேலை செய்யும் எங்களுக்கு ஏன் சம்பளத்தை வழங்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து பேசினர்

மேலும், அரசு நிர்ணயித்த முறையான முழு சம்பளத்தை வழங்கினால் மட்டுமே பணியை செய்வோம் என  கூறினர்