கள்ளக்காதல்கொலை: மனைவி, கள்ளக்லாதலனுக்கு ஆயுள் தண்டனை!

கள்ளக்காதல்கொலை: மனைவி, கள்ளக்லாதலனுக்கு ஆயுள் தண்டனை!

கு.அசோக்,

 கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த  நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

   சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(35). இவருக்கு அமலா(34) என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. விநாயகமூர்த்தி அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விநயாகமூர்த்தியின் மனைவிக்கு, கணவரின் நண்பரான ரமேஷ்(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்த கணவன் மனைவி அமலாவை கண்டித்துள்ளார்.

   இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் ரமேஷ், அமலாவுடன் சேர்ந்து அவரது கணவர் விநாயக மூர்த்தியை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியன்று கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், விநாயக மூர்த்தியை அடித்து கொலை செய்த மனைவி அமலா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

   இந்த வழக்கு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2-வது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்த ரமேஷ் மற்றும் அமலா ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் ஆயூள் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.