ஆட்டோ ஓட்டிப்பார்த்த கலெக்டர்! முதல்வர் பங்கேற்கும் பகுதியை ஆய்வு செய்தார்!

ம.பா.கெஜராஜ்!
வேலூர் மாவட்டம் கோட்டை வெளிமைதானம், பொய்கை, பள்ளிகொண்டா , குடியாத்தம் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் கலந்துக்கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சமத்துவபுரம், பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்து பள்ளியில் தமிழக அரசின் பள்ளிகளுக்கான வழிக்காட்டு நெறி முறைகள் பின்பற்றபடுகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் வாகன தணிக்கைக்கு வந்துள்ள பள்ளி வாகனனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களின் உரிமங்கள் முறையாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு.அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ் செழியன் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.