இ பைலிங் வேண்டாம் வக்கீல்கள் ஆர்பாட்டம்!

ஜி.கே.சேகரன்,
நீதிமன்றத்தில் இ பைலிங் முறையை ரத்து செய்ய கோரி வேலூர் மற்றும் ஆம்பூர் நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுழைவாயிலில் வழக்கறிஞர் அண்ணாமலை தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனா.
இதில் மத்திய அரசு இ பைலிங் முறையை ரத்து செய்ய கோரியும் இதனால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே வழக்கறிஞர்கள் இபைலிங்கை ரத்து கோரி கோஷங்களை எழுப்பி திரளான வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் செய்தனர்
ஆம்பூர்
திருப்பத்தூர்மாவட்டம்,ஆம்பூரில் உள்ள ஆம்பூர் நீதிமன்ற வளாகத்தில் இபைலிங்க் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது இதனால் வழக்கறிஞர்கள் பாதிக்கபடுவார்கள் என கூறி நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் திரளானோர் பங்கேற்று இபைலிங் முறையை ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.