பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்!

உ.சசிக்குமார்,
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு.பொ.இரத்தினசாமி,இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. செ.பாஸ்கரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் திரு. கணபதி, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் அரங்கு
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது. இதில் கீ.வ குப்பம் ஒன்றியத்தை சேர்ந்த 6 பயனாளிகளுக்கு ரூ.3.80 இலட்சம் நிதிக்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் திரு.ராஜேஷ்குமார், செயல் அலுவலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேர்னாம்பட்டு,
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சுவைத்து பார்த்தும், பல்லலகுப்பம் ஊராட்சியில் இருந்து பொகளுர் செல்லும் சாலையை மறுசீரமைப்பது குறித்தும், ரூ.3.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளையும், நகராட்சியில் உள்ள மயான பூமிக்கு செல்லும் பாதையில் கால்வாய் அமைப்பது தொடர்பாகவும், மயான பூமிக்கு சுற்றுசுவர் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி சித்ரா ஜனார்த்தனம், பேரணாம்பட்டு வட்டாட்சியர் திரு. நெடுமாறன், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.திருமால், பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ஹேமலதா, திருமதி எழிலரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் உட்கோட்டம் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைகளின் ஓரங்களில் 4000 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் உள்ளி ஊராட்சி பகுதி குடியாத்தம் - ஆம்பூர் நெடுஞ்சாலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது உதவி கோட்ட பொறியாளர் திரு. சம்பத்குமார், குடியாத்தம் வட்டாட்சியர் திரு. விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.திருமால் உட்பட பலர் உடன் இருந்தனர்.