போலி மருத்துவரால் உயிரிழந்த பள்ளி மாணவர்!

ஜி.கே.சேகரன்,
நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு அருகே போலி மருத்துவர் சிகிச்சை அளித்ததில் பள்ளி மாணவன் பலியானான்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தோப்பலகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஜாடன் குட்டை பகுதியை பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தி.
இவரது ஒரே மகனான சூரிய பிரகாஷ்(13) நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்திற்கு சொந்தமான பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு நாயனசெருவு பகுதியில் இருந்த ஒரு குட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு வைத்தியம் பார்ப்பவர் போலி மருத்துவர் ஆவார். அவரது பெயர் கோபிநாத், திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர்.
மேற்படி கோபிநாத் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.