கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது என கலெக்டர் எச்சரிக்கை!

கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது என கலெக்டர் எச்சரிக்கை!

 ஜி.கே.சேகரன்,

 கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது,மக்கள் உடலை தூய்மையாக வைத்துகொள்வதுடன் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்துகொண்டால் நோய் வராமல் தடுக்கலாம் - வேலூர் மாவட்ட சுகாதார பேரவை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் பேச்சு.

 வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நகர அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை துவக்க விழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

  குத்துவிளக்கேற்றி விழாவினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

 இந்த விழாவில் சுகாதாரதுறை இணை இயக்குநர் பானுமதி,மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் சுகாதாரத்துறை பணியாளர்களும் திரளான ஊழியர்களும் பங்கேற்றனர்.

  இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் அனைவரும் உடற்தூய்மையை பேண வேண்டும் அதன் மூலம் நாம் நம்மை நோய்களில் இருந்து தற்காத்துகொள்ள முடியும்.

  மேலும் தொற்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க சுகாதார விழிப்புணர்வுடன் இருப்பதுடன் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

   மக்கள் அவ்வாறு செய்தால் கொசுக்கள் பெருகி டெங்கு மலேரியா போன்ற நோய்களுக்கு அது வழிவகுக்கும் எனவே சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென பேசினார்.