3 பேர் டிஸ்மிஸ் 10 பேர் சஸ்பெண்டு! ஆட்சியர் அமர்குஷ்வாஹா கறார்!

3 பேர் டிஸ்மிஸ் 10 பேர் சஸ்பெண்டு! ஆட்சியர் அமர்குஷ்வாஹா கறார்!

 ஆர்.ரமேஷ்,

  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியில் இல்லாத அங்கன்வாடி ஊழியர்கள் 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதோடு 10 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது.

  அவற்றை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப.அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டார்.

  அப்போது பல்வேறு வாக்குசாவடிகளில் பணியில் இருக்க வேண்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது.

  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அனிமேட்டராக பணிபுரிந்து வந்த கலைவாணி, ஆம்பூர் தொகுதியில் பணியில் இல்லாத சுவாதிலட்சுமி, கவிதா, பத்மாவதி, மாதனூர் கிராம உதவியாளர் வசந்தி ஆகியோரை சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதேபோல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்களான புள்ளானேரி எஸ்.கீதா, ஏலகிரி விமலா, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி மோட்டூர் ராணி, திருப்பத்தூர் டவுன் சத்துணவு அமைப்பாளர் சிவானந்தம், வசந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

  மேலும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பூரிகா மானிமிட்டா அங்கன்வாடி பணியாளர் தீபா, திருப்பத்தூர் தொகுதியில் சத்துணவு அமைப்பாளர்களான சேவியர் புஷ்பராஜ், ஆரோக்கியதாஸ் ஆகியோர் கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிந்துரையின்பேரில் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

   இனிசிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பணிபுரியாத வாக்குசாவடி நிலை அலுவலர்கள், மைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கறார் காட்டியிருக்கிறார்.

 நடவடிக்கைக்கு ஆளானவர்களில் பெண்களே அதிகம்.