போலிஸ் ஸ்டேஷன் பக்கமே வரமாட்டோம்! கதறி அழும் பெண்!
ஆர்.ராஜேஷ்குமார்,
நாங்கள் இனி போலிஸ் ஸ்டேஷன் பக்கமே வரமாட்டோம் என்கிற அழுகுரலோடு ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.
அதில் அழுது கொண்டே பேசும் ஒரு பெண் தனக்கு 17 வயது எனவும் பெயர் சங்கிதா, தனது தங்கையின் பெயர் மதுமிதா வயது 15ரெஅனவும் சொல்லி கதறி அழுகிறார்.
நாங்கள் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள கிராமம் என்று சொல்கிறார். கிராமத்தின் பெயர் தெளிவாக புரியவில்லை.
அதில் எங்களை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளார்கள், எங்களால் வீட்டிலிருந்து கூட வெளியில் வர முடியலை. தினேஷ் மற்றும் எல்லப்பன் ஆகியோர் தான் இதற்கு காரணம். நாங்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு செத்துவிடலாம் என்று நினைக்கிறோம்.
ஏற்கனவே 7 ஆம் தேதி ஒரு வீடியோ போட்டோம். நாங்கள் தற்கொலை செய்ய முயன்ற போது எங்க அம்மா மாட்டை ஓட்டிக்கிட்டு வந்துட்டாங்க. அவரை எப்படி தனியா விட்டுவிட்டு போவது என்று அமைதியாக இருந்துவிட்டோம்.
இது பற்றி மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அவர்கள் ஒரு உதவியும் செய்யவில்லை. இனிமே நாங்கள் போலிஸ் ஸ்டேஷன் பக்கமே போகமாட்டோம். அவர்கள் ரொம்ப கெட்டவங்க, முதல்வர் அய்யா எங்களை காப்பாற்றுங்கள் என்று அக்காவும் தங்கையும் அழுகிறார்கள்.
இது குறித்து மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரம் அறிய முற்பட்டோம், ஆனால் அது இயலவில்லை.
ஊரைவிட்டு விலக்கி வைத்திருப்பதாக கதறும் இந்த இளம் பெண்களுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் உதவினால் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
குறிப்பு:-சிறுமியிடம் புகாரைப் பெற்று ச/பி 294(b),323 bhi,506(1) IPC r/w 4 of women harrasment Act ல்
1-தினேஷ் குகன் திருக்கழுக்குன்றம் பாமக கிழக்கு ஒன்றிய முன்னாள் ஒன்றிய செயலாளர்
2-எல்லப்பன்
3-கோபாலகிருஷ்ணன்
மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.