வேலூர்-திருப்பத்தூர் நீதிமன்றங்களில் யோகா!

வேலூர்-திருப்பத்தூர் நீதிமன்றங்களில் யோகா!

கு.அசோக்,

   வேலூர் மற்றும் திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்களும் யோகாசனங்களை செய்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ராஜசேகர் தலைமையில் வேதாந்தரி மகரிஷி யோகா மைய யோகா ஆசிரியர்  கலைசெல்வன் யோகா பயிற்சிகளை  பயிற்றுவித்தார்.

   இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள்,மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 இதேபோல் தேவலாபுரம் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்க நிர்வாகிகள்  பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் யோகா பயிற்சிகள் மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துறைக்கபட்டது.

            மேலும் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளிலும் யோகா தின சிறப்பு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளபட்டது

வேலூர்மாவட்டம்,

  வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மேலும் பல நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்

  இன்றைய இளைஞர்களும் மன உறுதியையும் உடல் உறுதியையும் பெற வேண்டும் நற் சிந்தனைகளை அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.