தங்க செயினை போலிசிடம் ஒப்படைத்த ஏழை பெண்!

ஜெ.அபி,

 கீழே கிடந்த 2 பவுன் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி பெண்ணிற்கு வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.

 திருநேல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் 24.01.2023- ம் தேதி கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார்.

   அதனை அப்பெண் சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேற்படி நகையை நகை  உரிமையாளர் திருமதி.நிலோபர் ஜெமிலா, அவர்கள், சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தெரிவித்ததன் பேரில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் திரு.சுபாஷ்ராஜன், அவர்கள், விசாரணை மேற்கொண்டு நகை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

  மேற்படி நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் அவர்கள் பெண்ணிற்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் திருமதி.தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

  ஏழ்மையிலும் நேர்மை என்பதை சுட்டிக்காட்டும் மாரியம்மாளை பலரும் பாராட்டலாமே.