உபி தூத்..டமால் டுமில் சோடா! பிரம்மாண்ட டைனிங்! நறுவீ சம்பத் இல்ல திருமண வரவேற்பில் குவிந்த விவிஐபிக்கள்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், வேலூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது வேலூர் நறுவீ மருத்துவமனை. இதன் நிறுவனத்தலைவருடைய இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வானது உபி தூத்..டமால் டுமில் சோடா மற்றும் பிரமாண்ட மேடை, ஏக்கர் கணக்கில் டைனிங் என தடபுடலாக நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ,எம்.பி,எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் என பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
விஐடி என்கிற பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனின் பேரனும், வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத்- அனிதா சம்பத் தம்பதியரின் மகன் நிதின் சம்பத்துக்கும், அடையாறு ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன்-லலிதா தம்பதியரின் மகள் அபிராமிக்கும் கடந்த 5-ம் சென்னை நீலாங்கரையில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேலூர் அடுத்த கந்தநேரி பகுதியில் உள்ள நறுவீ கன்வென்சன் சென்டரில் நேற்று வெள்ளியன்று மாலை நடைபெற்றது.
இதில் தி.மு.க பொதுச் செயலாளரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை தவத்திரு சச்சிதானந்தம் சுவாமிகள் ஆகியோர் ஆசீர்வதித்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்வில் கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி, எஸ்.பி மதிவாணன் மற்றும் வேலூர் எம்பி டி.எம்.கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜே.எல்.ஈஸ்வரப்பன், வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோர் வருகை புரிந்தனர்.
மேலும், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வி.எஸ்.விஜய், என்.டி.சண்முகம். முன்னாள் எம்எல்ஏக்கள் சி.ஞானசேகரன், ப.நீலகண்டன், ஆற்காடு எஸ்.பழனி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அதே போல் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், இராணிப்பேட்டை எஸ்.எம்.சுகுமார், ஏ.பி.எல்.சுந்தரம், நா.சுப்பிரமணி, டீக்காராமன், துரை சிங்காரம், முகமது சகி, வன்னியராஜா, நரசிம்மன், மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர் கணேஷ் சங்கர், பாஜக மாவட்ட தலைவர் மனோகரன், சுமதிமனோகரன், அரியூர் ஏ.ஜி.ஆறுமுகம், ஜெயப்பிரகாஷ், கல்வியாளர்கள் டிகேஎம் மகளிர் கல்லூரி செயலாளர் டி.மணிநாதன், அம்பிகா சிவகுமார், சன்பீம் கல்வி குழும சேர்மன் ஹரிகோபாலன், ஸ்பிரிங் டேஸ் பள்ளி நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், அன்னை மீரா ராமதாஸ், ஸ்ரீ¦புரம் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு ஆகியோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் சுசி குரூப்ஸ் குழுமங்களின் தலைவர் சுசி மணிவண்ணன், கேஎம்ஜி கல்வி நிறுவனம் ராஜேந்திரன், தொழிலதிபர்கள் குமரன் மருத்துவமனை தலைவர் டாக்டர் குமரகுரு, கே.எச்.நிறுவனங்கள் தலைவர் முகமது ஆசிம், அலங்கார் வெங்கடசுப்பு, துர்கா பவன் உதய் சங்கர், ஆரியாஸ் ராமகிருஷ்ணன், வணிகர்கள் சங்க பேரவை தலைவர் ஞானவேல், லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் செல்வகுமார் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்லாயிரகணக்கானேர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக சுமார் மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேற்கூரை சாண்டில்யர் விளக்குகள், அதிநவீன வட்டவடிவு விளக்குகள் என அமைக்கப்பட்டு அரங்கு ஜொலித்தது.
மேடைக்கு மணமக்கள் வருகை புரிந்த போது பிரமாதமான தேவதைகள் நடனம் ஆடி அவர்களை அழைத்து வந்தனர். இதற்காக கர்நாடகா மாநிலத்திலிருந்து சிறப்பு குழுவினர் ஆண் பெண் என அழைக்கப்பட்டிருந்தனர்.
அதே போல் வாழ்த்த வந்திருந்தவர்களுக்கு வசதியாக பெரிய உணவுக்கூடம் ஏற்பாடு செய்து ஃபப்பே சிஸ்ட்டம் மற்றும் பரிமாறும் முறை என சுமார் 50 வகையான உணவுகள் அளிக்கப்பட்டன.
மேலும் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து மசாலா பாலை சுழன்று சுழன்று ஆற்றிக் கொடுக்கும் உ.பி.தூத் குழு மற்றும் சோடா பாட்டிலை தூக்கி வீசி பிடித்து டிரிங்க்ஸ் அளிக்கும் டமால் டுமில் சோடா குழு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் கார் பார்க்கிங். பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு வாகனங்கள் சிரமமின்றி நிறுத்தி பின்னர் வெளியேற தனித்தனி வழிகள் வடிவமைக்கப்பட்டு, இதற்கெல்லாம் வழிகாட்டுவதற்காக நூற்றுகணக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நிதின்-அபிராமி திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத்- அனிதா சம்பத் தம்பதியர்,அடையாறு ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர்கள் கே.டி.வெங்கடேசன்-லலிதா தம்பதியினர், கே.டி.சீனிவாச ராஜா-ஆனந்தி தம்பதியினர் மற்றும் இயக்குநர் விஷ்ணு சங்கர் -சுவேதா தம்பதியினர் வரவேற்று சிறபித்தனர்.