பெண்ணை கத்தியால் வெட்டிய இளைஞர்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கணபதி தெருவை சேர்ந்த ரத்தினதேவி (58). இவரது மகன் சதீஷ் ,அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (23) நேற்று முன்தினம் குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிறகு சமாதானமாக சென்று உளளனர்.
இந்நிலையில் அருண்குமார் சதிஷ் வீட்டின் முன் நின்று சதீஷை வெளி வரும் படி அழைத்துள்ளார்.சத்தம் கேட்டு சதீஷின் தாயார் ரத்தினதேவி வெளியே வந்து சதீஷை அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரத்தினதேவி வலது கை வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த ரத்தினதேவியை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.