தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால் பாஜகவுக்கு சிக்கல்! தமிழிசை செந்தரராஜன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால் பாஜகவுக்கு சிக்கல்! தமிழிசை செந்தரராஜன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால் சிக்கல் -  மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது - முதல்வர் ஸ்டாலின் மோடி ஷுட்டிங்க் நடத்துவதாக கூறுகிறார் ஆனால் அவர் கொடைக்கானல் சென்று கோல்ப் விளையாடிய போது கேமரா இல்லாமலா படம் பிடித்தார் - காட்பாடியில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.

 வேலூர்மாவட்டம், குடியாத்தம் நகரில் தமிழை சொந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ரயில் மூலமாக காட்பாடி வந்த தமிழிசையை பாஜகவினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இன்று அவருக்கு பிறந்த தினம் என்பதால் அங்கிருந்தவர்களுக்கு அவர் லட்டு கொடுத்தார்.

 தெலுங்கானா முன்னாள் ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான் தெலுங்கானாவும் பிறந்தது ஜுன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக வர வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும்.

 வேங்கை வயல் பிரச்சணைக்கு தீர்வில்லை, கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா, போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.  காங்கிரசின் மாவட்டத்தலைவர் கொலைக்கு தடயமும் தீர்வும் கிடைக்கவில்லை.

 இவ்வளவு தோல்விகளை வைத்துகொண்டும், ரேஷன் அரிசி கடத்தல், மின் கட்டணம், பால், பத்திரபதிவு உயர்வுதமிழக மக்கள் வளர்ச்சியை நோக்கி ஊழலுக்கு எதிராக வாக்களிக்க புரட்சி செய்ய வேண்டும்.

 இலாக்கா இல்லாத ஒரு அமைச்சர் ஊழலால் சிறையில் உள்ளார். மக்கள் இதனால் வெறுப்படைந்துள்ளனர் வருங்காலத்தில் இதனை உணர வேண்டும். பாரத தேச மக்கள் வளர்ச்சிக்க்காக ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனா.

¢ மக்கள் பிரதமர் மீது அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனாதமிழகத்தில் இன்னும் அதிகமான எண்ணிக்கையை எதிர்பார்த்தோம் திமுக கூட்டணி பலமாக உள்ளது ஆனால் எதிர் வாக்கு சிதறுகிறது அதுதான் சிக்கல்.

  இருந்தாலும் தமிழக கருத்து கணிப்பை விட அதிக எண்ணிக்கையை பெறுவோம். திராவிட மாயையுடன் தவறுகள் நடக்கிறது.

 இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார். ஆனால் ஸ்டாலின் கொடைக்கானால் கோல்ப் விளையாடினார். இதையெல்லாம் கேமரா இல்லாமலா படம் எடுத்தனர். மோடி எங்கு சென்றாலும் தியானம் செய்யலாம் ஆனால் கன்னியாகுமரி ஒரு தியாக பூமி.

 அங்கு தியானம் செய்தால் பார்வதி மாதா தவம் செய்த இடம், விவேகானந்தர் தவம் செய்த இடம், இப்படிப்பட்ட ஆன்மீக இடம் உள்ளது என்பதை எடுத்து சொல்ல தான் மோடி அங்கு தியானம் செய்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

  பிரதமர் அங்கு தியானம் செய்ததால் அதன் முக்கியத்துவம் அதிகமாக தெரிகிறது. பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும். பிரதமர் மோடி தினமும் காந்தி சிலைக்கு பூதூவி தான் அலுவலகத்தில் இருக்கிறார்.

  மோடி எதை செய்தாலும் அது திணிக்கப்படுகிறது. ஒரு நடிகர் சொல்கிறார் மோடி ஷுட்டிங்க் நடத்துகிறார் என்று திமுக அலுவலகத்தில் எல்லாம் இப்போது தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். ¢ முரசொலியில் காந்தியை பற்றி தலையங்கம் எழுதுகின்றனர் இதற்கு அவர்களை எழுத வைக்க மோடி தான் காரணம் என சொன்னார்.