கட்டை கூத்து கலைஞர்களின் தத்ரூப நடிப்பு!

கட்டை கூத்து கலைஞர்களின் தத்ரூப நடிப்பு!
கு.அசோக்,
சோளிங்கரில் திரௌபதியம்மன் ஆலய தீமிதி விழாவை முன்னிட்டு துரியோதனை படுகள நிகழ்ச்சி திரளான மக்கள் கண்டு மகிழ்ந்து சுவாமி தரிசணம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் 13 நாள் தீமிதி திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திரௌபதி அம்மனுக்கும் ,அர்ஜுனன் சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பம்பை மேளங்கள் முழங்க திருக்கோயில் வளாகத்தில் இருந்து சுவாமி படுகளம் நிகழ்ச்சியில் எந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
தொடர்ந்து மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் துரியோதனன் பீமன் படுகளம் நிகழ்ச்சியை கட்டைக் கூத்து கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.