தமிழகம் முழுவதும் தேடப்பட்டு வந்த கொள்ளையன் திருப்பத்தூரில் பிடிபட்டான்?!

தமிழகம் முழுவதும் தேடப்பட்டு வந்த கொள்ளையன் திருப்பத்தூரில் பிடிபட்டான்?!

 ஜி.கே.சேகரன்,

 தமிழகம் முழுவது தேடப்பட்டு வந்த பலே கொள்ளையன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அமுக்கி பிடிக்கப்பட்டான்.

  ஜோலார்பேட்டையை அடுத்த ஹயாத் நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி வசந்தா(61) வீட்டில் கடந்த  27.8.2023 ஆம் தேதி  ஐந்தரை சவரன் தங்க நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளா£,

   ¢இது குறித்து வசந்தா திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்த நிலையில், திருப்பத்தூர் நகர போலீசார் சின்ன குளம் மாரியம்மன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

  இதன் காரணமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஹயாத் நகர் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 6 திருட்டு வழக்கில் ஈடுபட்டதும், இவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சங்கர் வயது 64 எனவும்தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் உள்ள  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இவர் என்றும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நகர போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா.¢

 ஒருத்தர் சிக்கினா போதாதா...கிடப்பில் உள்ள வழக்கையெல்லாம் முடிச்சுட வேண்டியதுதான். இது தானே நம் ஊர் வழக்கம்.