சென்னை காவல் ஆணையர் தீடீரென மருத்துவமனையில் அனுமதி!

சென்னை காவல் ஆணையர் தீடீரென மருத்துவமனையில் அனுமதி!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் வழக்கம் போல  வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருந்தார்.

 அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இதையடுத்து, அங்கிருந்த காவல் அதிகாரிகள் சங்கர் ஜிவாலைக் காவல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.