மக்களை வெறுப்பேற்றும் மின்வாரியம்!

ஜோ.மோசஸ்,
கரண்ட் பில்லும் ஜாஸ்த்தி... கவுன்ட்டரில் அதிகபட்சம் ரூ.4,000 தான் பெறுவார்களாம்... இதனால் தமிழக மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்.
மின்சார வாடிக்கையாளர்கள் தங்களது மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகங்கள், தபால் நிலையங்கள், இ-சேவை மையங்கள், வங்கிகள், ஆன்லைன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். அப்படியிருக்க மின் கட்டண வசூலிப்பதில் கடந்த ஓராண்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல், வெறும் வாய்மொழி உத்தரவாக இருந்தது. ஆகவே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே வாக்குவாதங்கள் எழுந்தன.
அந்த வகையில், கவுன்ட்டர்களில் அதிகபட்சமாக 5,000 ரூபாயை மட்டுமே வாங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு உத்தரவு வாய்மொழியாக வந்தது.
ஆனால் அந்த உத்தரவானது தற்போது 4,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் முதலில் கவுன்ட்டர்களில் இருக்கும் ஊழியர்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்துள்ளது. அதன்பிறகு வாடிக்கையாளர்கள் வெறுப்பானார்கள்.
முன்பு 10,000 ரூபாய் வரை கவுன்ட்டர்களில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏன் இப்படி குறைத்து கொண்டே வந்துவிட்டீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.