பாவம் ரப்பர் தொழிற்சாலை ஊழியர்கள்! தொடரும் போராட்டம்!

பாவம் ரப்பர் தொழிற்சாலை ஊழியர்கள்! தொடரும் போராட்டம்!

 வி.குமரேசன்,

கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக போராட்டம். அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என அனைத்து சங்க தொழிலாளர்களும் அறிவிப்பு.

 தொழிலாளர்கள் கூறியதாவது,

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ரப்பர் கழக தொழிற்கூடத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள். சல்யூரிக் ஆஷீட், அமோனியா வாய்வு போன்ற நச்சு தன்மை வாய்ந்தவற்றில் தினம் தினம். பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

  இதனால் தொழிலாளர்களுக்கு கால் அடிபாதங்களில், புண் ஏற்படுகிறது. மூச்சு திணரல், மற்றும் கண் பாதிப்புகள், இதையும் தாண்டி தொழிலாளர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சமீபத்தில் ஒரு பெண் தொழிலாளிக்கு புற்று நோய் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

  மேல் கூறிய உடல் உபாதைகள் தொழிலாளர்களுக்கு ஏற்படுவதால் இது சம்மந்தமாக. அரசு ரப்பர் கழக நிர்வாகத்திடம் பலமுறை எங்களுக்கு, போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தி தரவேண்டும். எங்களுக்கு என்று இந்திய தொழிலாளர்கள் அரசு காப்பீடு திட்டம் E.S.I.E  ஏற்படுத்தி தரவேண்டும் என்று பலநாள் கோரிக்கையும் வைத்து போராட்டமும் நடத்தி வருகிறோம்.

  ஆனால் நிர்வாகம் எங்களை அரசு சட்டத்துக்கு புரம்பாகவும். தொழிற்சாலைகள் சட்டத்துக்கு புரம்பாகவும் தோட்ட மருத்துவ மனை கீரிப்பாறை கோட்டத்தில் மருத்துவர்களை நியமனம் செய்யாமல் மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் செவிலியர்களிடமிருந்து மருந்து மாத்திரை வாங்கி செல்ல அறியுறுத்தி வருகிறது.

 எங்¢களுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது, என தெரியாமல் உத்தேசமாக மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்புகிறார்கள் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

  ஆகையால் இனி மேல் கொண்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக E.S.I.E -யில் தொழிலாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

  மேலும்,  ஸ்கிம் பிரிவில் எடை நிர்னயம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி,மனுக்கள் நிர்வாகத்திடம் கொடுத்த பிறகும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காதது கண்டித்தும்.

தொழிற்கூடவாயிற் கதவு பணியினை நிரந்தர காவலர்கள் கழகத்தில் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்பாடையிலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் நியமிக்க கோரியும்.

ஷோபா / ரகுவரன் என்ற பெண் தொழிலாளிக்கு புற்று நோய் பாதிக்கப்பட்டு இதுவரை மருத்துவ சிகிச்சை செய்த ஆதாரங்களும் மருந்து மாத்திரை விலைபட்டியலும் வழங்கியும் நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும்.

 தொழிற்கூடத்தில் சமீபகாலமாக தொழிலாளர்கள் பற்றாகுறை ஏற்படுவதால் தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களை மிரட்டி கூடுதல் பணி செய்ய அறியுறுத்துவதை கண்டித்தும்.

  தொழிற்கூடத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், 25/11/24 அன்று ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இருபது நாட்களுக்கு மேலாக நடைபெறுகிறது. இன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிகாரிகளின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என தொழில் சங்கத்தினர் அறிவித்தனர்.