தாய் சேய் இறப்பு! கொலையா தற்கொலையா?

கு.அசோக்,
வேலூர்,அலுமேலுமங்காபுரம், அழகிரி நகரில் 3 வயது சிறுவன் மற்றும் தாய் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்பு!வேலூரில் பரபரப்பு - போலீஸ் தீவிர விசாரணை!
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் அழகிரி நகர் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி நந்தகுமார் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி நித்யஸ்ரீ (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளான்.இந்த நிலையில் யோகேஸ்வரன் ( 3). நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் இன்று இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருந்தது.
தாயும் குழந்தையும் இறந்த தகவல் கேட்டு உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது நித்தியஸ்ரீ மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர்.
இதனிடைய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலத்த காயம் அடைந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது நித்தியஸ்ரீ, சத்துவாச்சாரி சுதந்திர பொன்விழா நகர் பகுதியை சேர்ந்தவர். அவரும் நந்தகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் பிறந்து உடல் நலக்குறைவால் இறந்துள்ளனர்.
3-ஆவதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நித்தியஸ்ரீக்கும் நந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
நாங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மெத்தையில் தாய் மகனின் இரு உடல்களும் அருகருகே கிடந்தது. நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான அடையாளங்கள் இருந்தது. ஆனால் குழந்தை இறப்புக்கான காரணம் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஒருவேளை குடும்ப தகராறு காரணமாக நித்தியஸ்ரீயே குழந்தையை கொன்று தற்கொலை தற்கொலை செய்திருக்கலாம். என்ன நடந்தது என்பது குறித்து நந்தகுமாரிடம் விசாரிக்க முடியாத சூழல் உள்ளது.
அவர் பொதுமக்களும் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இருவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.